Monday, September 8, 2008


குமுறல்
இதயம் படைக்கப்பட்ட மனிதனாய் பிறந்தேன் ..,
சமயம் சபிக்கப்பட்ட காதலில் விழுந்தேன் ..,
இவ்விதிக்கப்பட்ட வாழ்வை பிறக்கும் போதே
உணர்ந்திருந்தால்
இறந்தே பிறந்திருப்பேன் நான் !!
இறந்தே பிறந்திருப்பேன் நான் !!

ஏமாற்றம்
காதல் என் வாழ்வின் முன்னுரை என
நினைத்திருந்தேன்
ஆனால் அதுவோ -
என் வாழ்வின் முடிவுரை ஆயிற்றே !!

உன் மெல்லிய விழியால் ..,
அவை பேசிய மொழியால் ..,
அம்மயக்கத்தின் மழையால் ..,
இக்காதலின் பிழையால் ..,
அது தந்த வலியால் ..,
மரண உறக்கம் அடைந்தேணடி -
நான்
மரண உறக்கம் அடைந்தேனடி.

காதல் முழக்கம்
பெண்னே !!
உயிரோடு என்னை சிலுவையில் ஏற்றத்தான்
-நீ அழகிய உருவம் படைத்தாயோ ??
கடலோடு என்னை கடத்திச்செல்லத்தான்
-நீ கடலில் ஏழுந்தாயோ ??
இரவில் உறக்கம் இழந்த என்னை
-நீ காதல் முழக்கமிட செய்தாயோ ??
உன்னால் மயக்கம் அடைந்த என்னை
-நீ மறந்துவிட்டு செல்வாயோ ??
நம் காதல் மனவறையில் என்னை
-நீ மறுத்துவிட்டு போவாயோ ??
அப்படியென்றால் ....,
பெண்ணே !!
உயிரோடு என்னை சிலுவையில் ஏற்றத்தான்
-நீ அழகிய உருவம் ஏடுத்தாயோ ??