Monday, September 8, 2008


காதல் முழக்கம்
பெண்னே !!
உயிரோடு என்னை சிலுவையில் ஏற்றத்தான்
-நீ அழகிய உருவம் படைத்தாயோ ??
கடலோடு என்னை கடத்திச்செல்லத்தான்
-நீ கடலில் ஏழுந்தாயோ ??
இரவில் உறக்கம் இழந்த என்னை
-நீ காதல் முழக்கமிட செய்தாயோ ??
உன்னால் மயக்கம் அடைந்த என்னை
-நீ மறந்துவிட்டு செல்வாயோ ??
நம் காதல் மனவறையில் என்னை
-நீ மறுத்துவிட்டு போவாயோ ??
அப்படியென்றால் ....,
பெண்ணே !!
உயிரோடு என்னை சிலுவையில் ஏற்றத்தான்
-நீ அழகிய உருவம் ஏடுத்தாயோ ??

Monday, April 7, 2008


மாயம்
முன்னூறு நாட்கள் நிம்மதியாய் வாழ்ந்தேன் -

தாயின் கருவறையில் ..,
அவள்-
முதல் பார்வையில் முழுவதும் மாய்ந்தேன்-
மண்ணின் கல்லறையில்.

வேடிக்கை
காதலில் வெற்றி அடைந்தால்-

சுகமான மணவறை கனவன்..,
அன்றோ !!
காதலில் தோல்வி அடைந்தால்-
சுமையான கல்லறை கவிஞன்.

வாழ வல்லமை தாராயோ ..,
வாழ்வில் வசந்தம் தாராயோ ..,
வாழ்ந்தே மயக்கம் தாராயோ ..,
என்றேன்.
அவளோ-
மடையா !!என்னை மறப்பாயோ ..,
மண்ணில் நீயும் மறைவாயோ ..,
என்னை விட்டு தொலைவாயோ ..
என்றாள்.
செய்வதரியாது திகைத்தேன் நான் -
அன் நொடியே வாழ்வை தொலைத்தேன் நான்.

ஜென்மம் பல எடுப்பேன் -
அவள் நிழலாய் இருப்பேன் -
அவளோடு வாழ துடிப்பேன் -
அவள் இன்றி வாழ மறுப்பேன் -
அவள் பிரிந்தால் ..,
மீண்டும் நான் இறப்பேன்.

வெறுப்பு
விருப்பம் அற்ற அவள் பார்வையால்-
வாழ்வை வெறுத்து போணேண்
நான்.,

இறக்கம் அற்ற அவள் செயலால்-
வாழ்வில் இறந்து போணேண்
நான்.
பெரும் படை எதற்கு?
பெண்ணே ...
உன் சிலை போதும்  -
எனை சிறை எடுக்க..,