Tuesday, March 8, 2011

ஒளி

நாம் பிறர் மீது வைக்கும் நம்பிக்கையின் உச்சம்-ஆத்திகம்
நமது தன்னம்பிக்கையின் உச்சம் - நாத்திகம் !!
நம் மனிதநேயத்தின் முத்தம் -  ஆன்மீகம்!!
நமது ஆனந்தத்தின் மிச்சம் - தியானம் !!

Thursday, August 13, 2009

பெண்னகை
இத்தகைய மெல்லிய பூவின் நகைப்பைத்தான்..,
அன்றே ஒரு கவிஞன்.,
அதற்கு புன்னகை என பெயரிட்டான்...
பெண்ணே..,
பேரழகே..,
இன்று நானும் ஒர் கவிஞன் தான்.,
இருப்பினும்,
அப்பூவே மதிமயங்கும் உன் வல்லிய நகைப்பிற்கு
நான் என்னவென்று பெயர் சூட்டுவது ??

Tuesday, January 20, 2009


நற்பூ
அடடா !!
நட்பின் சிறப்புகள் ஆயிரம்-
நான் கவி எழுத அதுவே காரணம் !!

நட்பு-
மனிதனின் 5 அங்குளம் இதயத்தில் 
3 அங்குளம் நிறைந்தோடும் !! 
நட்பு- 
எனும் புத்தகத்தை வாசிக்கும் பொழுதே 
நம்ழுள் புத்துணர்ச்சியும் புதுமுயற்சியும் வழிந்தோடும் !! 
நட்பு- 
நம் சுகமான நேரங்களில் நம்முடன் ஆனந்தமாய் விளையாடும் 
நம் கனமான நேரங்களில் சற்றே ஆறுதலாய் நம்மோடு நடைபோடும்!!
நட்பு- 
வெகுவாக நம்முள்ளே கலந்தோடும் 
விரைவாக துன்பங்கள் கரைந்தோடும் !! 
நட்பு- 
இதை எண்ணி என் இதயம் என்றென்றும் கவிபாடும் 
உன்னொடும் என்னொடும் என்றென்றும் உறவாடும் !!

மொத்தத்தில்
நட்பை பற்றி சொல்வதே 
ஓர் சிறப்பு !!
 
உயிரொடு உயிர் சேர்த்து 
உடலோடு கை கோர்த்து 
உறவாடும் கவிதைதானே இந்நட்பு...,

தன்னை சுற்றி யாரும் இல்லை  
என என்னும் பொழுதே 
அன்னையாய் முதலில் கரம் நீட்டும்  
பேரழகு தானே இந்நட்பு !!

இன்பத்தை உட்சமாய்.., 
துன்பத்தை துட்சமாய்.. 
மாற்றிடுமே அழகிய நட்பு !!

சொல்லில் முடிவதா நட்பு ??
விண்ணை தொடுவதே நல்ல நட்பு !!
இமைகளில் மறையுமா நட்பு ?? 
இதயத்தில் தொடருமே நல்ல நட்பு !!

வார்த்தைகளில் முடியவில்லை நல்ல நட்பு ..
வாழ்க்கையிலும் முடிவதில்லை நல்ல நட்பு !!

வாழ்வில்- 
நல்ல நட்பினை தேர்ந்தேடு !! 
உன் வசந்தத்தை உணர்ந்திடு !!
அதனுடன் கைகோர்த்து உயர்ந்திடு !!

- இனிய நண்பன்.

Monday, September 8, 2008


குமுறல்
இதயம் படைக்கப்பட்ட மனிதனாய் பிறந்தேன் ..,
சமயம் சபிக்கப்பட்ட காதலில் விழுந்தேன் ..,
இவ்விதிக்கப்பட்ட வாழ்வை பிறக்கும் போதே
உணர்ந்திருந்தால்
இறந்தே பிறந்திருப்பேன் நான் !!
இறந்தே பிறந்திருப்பேன் நான் !!

ஏமாற்றம்
காதல் என் வாழ்வின் முன்னுரை என
நினைத்திருந்தேன்
ஆனால் அதுவோ -
என் வாழ்வின் முடிவுரை ஆயிற்றே !!

உன் மெல்லிய விழியால் ..,
அவை பேசிய மொழியால் ..,
அம்மயக்கத்தின் மழையால் ..,
இக்காதலின் பிழையால் ..,
அது தந்த வலியால் ..,
மரண உறக்கம் அடைந்தேணடி -
நான்
மரண உறக்கம் அடைந்தேனடி.

காதல் முழக்கம்
பெண்னே !!
உயிரோடு என்னை சிலுவையில் ஏற்றத்தான்
-நீ அழகிய உருவம் படைத்தாயோ ??
கடலோடு என்னை கடத்திச்செல்லத்தான்
-நீ கடலில் ஏழுந்தாயோ ??
இரவில் உறக்கம் இழந்த என்னை
-நீ காதல் முழக்கமிட செய்தாயோ ??
உன்னால் மயக்கம் அடைந்த என்னை
-நீ மறந்துவிட்டு செல்வாயோ ??
நம் காதல் மனவறையில் என்னை
-நீ மறுத்துவிட்டு போவாயோ ??
அப்படியென்றால் ....,
பெண்ணே !!
உயிரோடு என்னை சிலுவையில் ஏற்றத்தான்
-நீ அழகிய உருவம் ஏடுத்தாயோ ??